லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

இந்தியாவை வெல்லும் அணிக்கே உலகக் கோப்பை: மைக்கெல் வான்

இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாகவும் இந்தியா திகழ்கிறது. 

Published On :31 ஜனவரி 2024, 2:52 pm IST

2019 உலகக் கோப்பை இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 268/7 ரன்களை குவித்தது. 

பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாகவும் இந்தியா திகழ்கிறது. 

2 முறை உலகக் கோப்பை வென்றுள்ள இந்திய அணி இம்முறை ஆடிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது. மழை காரணமாக நியூஸிலாந்து உடனான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வான் கூறியதாவது, ''இப்படி வைத்துக்கொள்வோம்... இம்முறை இந்திய அணியை வீழ்த்தும் அணிக்கே உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது'' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மைக்கெல் வானின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.