கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொடர் ரத்தாகுமா?: கரோனா அச்சுறுத்தலால் 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு!

2-வது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக...

News image

இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் (கோப்புப் படம்)

Updated On :7 டிசம்பர் 2020, 10:32 am

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-0 என முற்றிலுமாகக் கைப்பற்றியது. 

டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வெள்ளியன்று தொடங்க வேண்டிய ஒருநாள் தொடர் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. 

ஒருநாள் தொடருக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெ.ஆ. வீரர் ஒருவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து அணியைச் சேர்ந்த இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் இரு அணிகளும் தங்கியிருந்த விடுதியைச் சேர்ந்த இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் நிலைமை முற்றிலும் மாறிப்போனது.

2-வது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தெளிவான நிலை அறிந்த பிறகே ஒருநாள் தொடர் தொடங்கும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தகவல் தெரிவித்துள்ளன. எந்தவொரு வீரரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிந்தால் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் இரு ஒருநாள் ஆட்டங்களும் நடைபெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் இங்கிலாந்து வீரர்கள் வியாழன் அன்று சொந்த ஊருக்குத் திரும்புவதாக உள்ளார்கள். தற்போதைய சூழலில் மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களும் நடைபெறாமல் ஒருநாள் தொடர் ரத்தாகவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.