மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர்: ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பார்தீவ் படேல்!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :9 டிசம்பர் 2020, 6:55 am

DIN

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்தீவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2002-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் பார்தீவ் படேல். இந்திய அணிக்காக 25 டெஸ்டுகள், 38 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2018-ல் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி  வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காகக் கடைசியாக இடம்பெற்றார். டெஸ்டில் ஆறு அரை சதங்கள் எடுத்துள்ளார். 

2002 யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இந்திய ஏ அணிக்காக விளையாடியவர் அடுத்ததாக இந்திய அணியிலும் இளம் வயதில் இடம்பெற்றார். இவருடைய ஆரம்ப காலத்தில் இந்திய அணி விளையாடிய 20 டெஸ்டுகளில் 19-ல் பார்தீவ் படேலுக்கு இடம் கிடைத்தது. விக்கெட் கீப்பிங்கில் செய்த தவறுகளும் தினேஷ் கார்த்திக், தோனி ஆகியோரின் வருகையும் இவருடைய வாய்ப்புகள் குறையக் காரணமாகின. 

சிஎஸ்கே அணி 2010-ல் மற்றும் மும்பை அணி 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்கள் வென்றபோது அந்த அணிகளில் பார்தீவ் படேல் இடம்பெற்றிருந்தார். 2017-ல் மும்பை அணியில் அதிக ரன்கள் (395) எடுத்தார். ஐபிஎல் போட்டியில் ஆறு அணிகளில் விளையாடியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த போதும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் இந்திய அணிக்காக விளையாடிய 4-வது இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.