மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் பார்தீவ் படேல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பார்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் பார்தீவ் படேல்
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பார்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்தீவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். 

சிஎஸ்கே அணி 2010-ல் மற்றும் மும்பை அணி 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்கள் வென்றபோது அந்த அணிகளில் பார்தீவ் படேல் இடம்பெற்றிருந்தார். 2017-ல் மும்பை அணியில் அதிக ரன்கள் (395) எடுத்தார். ஐபிஎல் போட்டியில் ஆறு அணிகளில் விளையாடியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த போதும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் ஓய்வு பெற்றுள்ள பார்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது இணைந்துள்ளார். திறமைகளைக் கண்டறியும் குழுவில் ஒருவராக பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 11,240 ரன்கள் எடுத்துள்ள பார்தீவ் படேலுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் உண்டு. இதனால் திறமையான உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com