பந்துவீச்சாளரின் ஒரு தவறுக்காகக் காத்திருந்தேன்: அசத்தல் வெற்றியை அளித்த ரோஹித் சர்மா பேட்டி

முக்கியமான ஆட்டங்களில் முக்கியமான வீரர்கள் நன்கு விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும்...
பந்துவீச்சாளரின் ஒரு தவறுக்காகக் காத்திருந்தேன்: அசத்தல் வெற்றியை அளித்த ரோஹித் சர்மா பேட்டி
Published on
Updated on
1 min read

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். பிறகு விளையாடிய நியூஸிலாந்து அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமன் ஆனது. பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. செளதி வீசிய சூப்பர் ஓவரில், கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்கிற நிலையில் இரு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா. இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது. 

யாரும் எதிர்பாராதவிதத்தில் 3-வது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வென்றுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 

ஆட்டம் முடிந்த பிறகு ரோஹித் சர்மா பேட்டியளித்ததாவது:

இது என்னுடைய முதல் சூப்பர் ஓவர். எனவே என்ன செய்யவேண்டும், முதலில் ஒரு ரன் எடுத்துவிட்டுக் கடைசி 3 பந்துகளில் அடிக்கவேண்டுமா, அல்லது முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆடவேண்டுமா என்பன எல்லாம் புதிராக இருந்தன. நான் நன்றாக விளையாடினாலும் ஆட்டமிழந்த விதத்தில் ஏமாற்றமடைந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் விளையாட எண்ணியிருந்தேன். சூப்பர் ஓவரில் தொடர்ந்து விளையாடி, பந்துவீச்சாளரின் ஒரு தவறுக்காகக் காத்திருந்தேன். முதல் இரு டி20 ஆட்டங்களில் நான் சரியாக விளையாடாததால் இன்று சிறப்பாக விளையாட எண்ணினேன். முக்கியமான ஆட்டங்களில் முக்கியமான வீரர்கள் நன்கு விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com