விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென் ஆப்பிரிக்க தொடர்: பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான இரு ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2020, 5:33 am

DIN

தென் ஆப்பிரிக்காவுடனான இரு ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. தரம்சாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 (லக்னோ) மற்றும் மார்ச் 18 (கொல்கத்தா) ஆகிய இடங்களில் அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், கரோனை வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக ஒருநாள் தொடரை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்றால், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டது.

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் பிசிசிஐ வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த வகையில் பார்வையாளர்களின்றி மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களும் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.