மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி

கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

News image

நேத்ரா குமணன் (கோப்புப் படம்)

Updated On :23 ஜூலை 2021, 4:57 pm

சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன், படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஓமனில் முசானா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. பாய்மரப் படகு ஓட்டும் போட்டியில் லேசர் ரேடிகல் பிரிவில் சக இந்தியரான ரம்யா சரவணனை விடவும் 21 புள்ளிகள் முன்னணியில் உள்ளார் நேத்ரா குமணன். இதனால் கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தை அவர் உறுதி செய்துள்ளார். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு நேத்ரா தகுதி பெற்றுள்ளார். 

படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். இதற்கு முன்பு படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒன்பது பேரும் ஆண்களே. 

2014 மற்றும் 2018-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்றுள்ளார் நேத்ரா குமணன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.