கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாபும் ஒன்று. 13 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை இறுதி ஆட்டம் வரை சென்றது. மற்றொரு முறை 3-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி 6-வது இடத்தைப் பிடித்தது.
14-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என மாற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரம் கூறியது:
"நீண்ட நாள்களாகப் பெயரை மாற்ற அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன் பெயரை மாற்ற நினைத்தனர். எனவே, இது திடீர் முடிவல்ல."