அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இங்கிலாந்து 396 ரன்களுக்கு டிக்ளேர்: மந்தானா, ஷெபாலி சீரான தொடக்கம்

இங்கிலாந்துடனான டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய மகளிர் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 3:14 pm

DIN


இங்கிலாந்துடனான டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய மகளிர் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

2-ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. 

அரைசதம் அடித்த டன்க்ளே 66 ரன்களுடனும் ஷ்ருப்சோல் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஷ்ருப்சோல் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். இதனால், இங்கிலாந்து ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், அதிரடி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ருப்சோல் 33 பந்துகளில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டுடன் 396 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டன்க்லே 74 ரன்கள் எடுத்தார்.

இந்திய மகளிர் தரப்பில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்தராகர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளாகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தானா, ஷெபாலி வெர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். 

2-ம் நாள் தேநீர் இடைவேளை வரை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் 63 ரன்கள் சேர்த்து இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மந்தானா 27 ரன்களுடனும், ஷெபாலி 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.