டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் ஒரு வெள்ளப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.
வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப்போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2ஆவது இடம் பிடித்து யோகேஷ் வெள்ளி வென்றார்.
இதையும் படிக்க- பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனிக்கு தங்கம்
டெல்லியைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ் வட்டு எறிதலில் வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.