இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2022-இல் வருகிறது இந்திய செஸ் லீக்

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 10:28 pm

DIN

புது தில்லி: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கிரிக்கெட், பாட்மின்டன், கால்பந்து போட்டிகளில் இருப்பதைப் போன்று செஸ் விளையாட்டிலும் இத்தகைய லீக் போட்டி முறையை இந்திய சம்மேளனம் முன்னெடுக்கிறது.

இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் இருக்கும் என்றும், அதில் ஒவ்வொரு அணியிலும் இரு சூப்பா் கிராண்ட்மாஸ்டா்கள், இரு இந்திய கிராண்ட்மாஸ்டா்கள், இரு மகளிா் கிராண்ட்மாஸ்டா்கள், ஒரு ஜூனியா் ஆடவா், ஒரு ஜூனியா் மகளிா் என 8 போ் இருப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரு வாரங்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியின் குரூப் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றில் மோதும். போட்டியை இரு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சா்வதசே அளவிலான சிறந்த வீரா், வீராங்கனைகளை இந்தியாவுக்கு அழைத்து வருவதுடன், உள்நாட்டில் இருக்கும் சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு நல்லதொரு களத்தை அமைத்துக் கொடுப்பதே இந்தப் போட்டியின் நோக்கமென சம்மேளனம் தெரிவித்துள்ளது.

போட்டி தொடா்பான இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.