சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

17 வயது மகளிர் உலக கோப்பை கால்பந்து: டிக்கெட் விற்பனை தொடங்கியது

17 வயதுக்கு குறைவான பிஃபா மகளிர் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 9:34 am

DIN

17 வயதுக்கு குறைவான பிஃபா மகளிர் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர். 

சா்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சாா்பில் வரும் அக்டோபா் மாதம் புவனேசுவரம், நவி மும்பை, மா்மகோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியாவும் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இதற்கான ஆட்ட அட்டவணை வரும் ஜூன் 24-ஆம் தேதி ஜூரிச்சில் வெளியிடப்பட்டது. 

புது தில்லியில் நேற்று (ஆக.5) இந்திய தேசிய அணியின் கேப்டன் சுனில் சேட்ரி, ஆச்டால தேவி, விளையாட்டுத்டுறை அமைச்சர், பிஃபா லெஜண்ட் லிண்ட்சே டார்ப்ளே மற்றும் இந்திய கால்பந்து வீரர்களுடன் இந்த விழா தொடங்கியது. 

அக்டோபர் 11ஆம் நாள் போட்டிகள் தொடங்க இருப்பது கூறிப்பிடத்தக்கது. டிக்கெட் விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஸ்டேடியத்தில் (புபனேஷ்வர், மும்பை, கோவா) இந்த டிக்கெட்டுகளை வாக்கிக்கொள்ளலாம். டிக்கெட் விற்பனைக்கு தொலைபேசி எண் +91-86570 19359 அல்லது இ-மெயில் contact@india2022wwc.com என்ற மெயிலை தொடர்பு கொள்ளலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படும். 

பல்வேறு என்.ஜி.ஓ குழுவிலிருந்து 200 குழந்தைகள் வந்திருந்தனர். விழாவினை தொடக்கி வைத்து அனுராக் தாக்கூர் பேசியதாவது: 

கடைசியாக 2017இல் 17வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்று 2022ஆம் ஆண்டிற்கான டிக்கெட் விற்பனையை தொடங்கி வைக்கிறோம். கடந்த முறையை விடவும் பெரிய அளவில் வெற்றி பெறும் முனைப்பில் இதை தொடங்கி வைக்கிறோம். இதற்காகவே ‘கனவை துரத்துங்கள்’ எனும் முழக்கத்தை உருவாகியிருக்கிறோம். சுனில் கூறியபடி ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் சமவாய்ப்பு வழங்கி வருகிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.