தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இறுதிப் போட்டிக்கு முன்பு பிரக்ஞானந்தாவின் அக்கா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?

உலக சாம்பியன் கார்ல்சனுடனான இறுதிப் போட்டிக்கு முன்பு என்னுடைய  அக்கா தன்னிடம் கூறிய அறிவுரை என்ன என்பதை பிரக்ஞானந்தா கூறியுள்ளார். 

News image

படம்: டிவிட்டர் | பிரக்ஞானந்தா

Updated On :22 ஆகஸ்ட் 2022, 10:12 am

DIN

உலக சாம்பியன் கார்ல்சனுடனான இறுதிப் போட்டிக்கு முன்பு என்னுடைய  அக்கா வைஷாலி தன்னிடம் கூறிய அறிவுரை என்ன என்பதை பிரக்ஞானந்தா கூறியுள்ளார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையானார் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

இறுதிப் போட்டியில் கார்ல்சனுடன் மோதினார் பிரக்ஞானந்தா. முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன. 3-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை கார்ல்சன் வென்றபோது போட்டியின் முடிவு உறுதியானது. அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்றதால் இருவரும் 2-2 என சமனில் இருந்தார்கள். டை பிரேக்கரில் இரு ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா வென்றார். இறுதிச்சுற்றில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினாலும் புள்ளிகளின் அடிப்படையில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பையை வென்றார் கார்ல்சன். பிரக்ஞானந்தாவுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 

அவரது அக்கா வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டி முடிந்த பிறகு செஸ்பேஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரக்ஞானந்தா கூறியதாவது: 

போட்டிக்கு முன்பு எனது அக்காவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்தது. அதில், “கவலைப்படாதே. கார்ல்சனை தோற்கடி” என்று மட்டும் இருந்தது. போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ஆனால் இதில் பெரிதாக பெரிதாக கொண்டாட ஏதுமில்லை. அடுத்த 3 நாட்களுக்கு எந்த போட்டியிலும் விளையாடப்போவதில்லை. இதில் கிடைத்த பணத்தை விட கார்ல்சனை வென்றது பெரிதாக கருதுகிறேன். நான் எப்போதும் ஜாலியாக விளையாடவே நினைக்கிறேன். தோற்றாலும் அப்படித்தான். நான் ஜெயிப்பேனென நினைக்கவில்லை. ஆனால் விளையாடும்போது கவனமாக ஆடுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.