பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கரோனா

ஆா்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
லயோனல் மெஸ்ஸி (கோப்புப் படம்)
Updated On :2 ஜனவரி 2022, 12:38 pm

DIN

ஆா்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெஸ்ஸியுடன் சேர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் நான்கு வீரர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

பிரெஞ்சுக் கோப்பைக்காக இந்த அணி விளையாட இருந்த நிலையில், தற்போது அணியில் நான்கு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியில் ஊழியர் ஒருவருக்கு முதலில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில் 7 முறை பேலோன் தோர் விருதை வென்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, ஜூயன் பெர்னட், செர்ஜியோ ரிகோ மற்றும் 19 வயதான நேதன் பிடுமஸாலா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.    

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.