சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐபிஎல் 2022 ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள்: பிசிசிஐ வெளியிட்ட முழு விவரம்

News image
Updated On :22 ஜனவரி 2022, 11:07 am

DIN

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ள வீரர்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல், ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.

2018-க்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

ஐபிஎல் ஏலத்துக்குப் பதிவு செய்த வீரர்கள் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக வீரர்கள் பதிவு செய்வது ஜனவரி 20 உடன் முடிவடைந்தது. 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என 1214 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ளார்கள்.

மெகா ஏலம் இரு நாள்களுக்கு நடக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 270 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகாத 903 வீரர்கள், 41 அசோசியேட் வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதன் விவரங்கள்:

- 61 இந்திய வீரர்கள்
- 209 வெளிநாட்டு வீரர்கள்
- 41 அசோசியேட் வீரர்கள்
-143 ஐபிஎல் போட்டியில் முன்பு விளையாடி, இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்கள்
- 9 ஐபிஎல் போட்டியில் முன்பு விளையாடி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள்
- 692 உள்ளூர் இந்திய வீரர்கள்
- 62 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் 

குறிப்பு - ஒவ்வொரு அணியும் 25 வீரர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஏலத்தில் 217 வீரர்கள் பங்கேற்கவேண்டும். அதில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள்

318 வெளிநாட்டு வீரர்கள் விவரங்கள்

ஆப்கானிஸ்தான் - 20 வீரர்கள்
ஆஸ்திரேலியா - 59 வீரர்கள்
வங்கதேசம் - 9 வீரர்கள்
இங்கிலாந்து - 30 வீரர்கள்
அயர்லாந்து - 3 வீரர்கள்
நியூசிலாந்து - 29 வீரர்கள்
தென்னாப்பிரிக்கா - 48 வீரர்கள்
இலங்கை - 36 வீரர்கள்
மே.இ. தீவுகள் - 41 வீரர்கள்
ஜிம்பாப்வே - 2 வீரர்கள்
பூடான் - 1 வீரர்
நமீபியா - 5 வீரர்கள்
நேபாளம் - 15 வீரர்கள்
நெதர்லாந்து - 1 வீரர்
ஓமன் - 3 வீரர்கள்
ஸ்காட்லாந்து - 1 வீரர்
ஐக்கிய அரபு அமீரகம் - 1 வீரர்
அமெரிக்கா - 14 வீரர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.