கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பெலாரஸுடனான ஆட்டத்தை தவிக்கும் முயற்சியில் இந்தியா?

நட்பு ரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் பெலாரஸுடன் விளையாடுவதை தவிா்க்க இந்தியா முயற்சித்து வருகிறது.

News image
Updated On :2 மார்ச் 2022, 8:59 pm

DIN

நட்பு ரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் பெலாரஸுடன் விளையாடுவதை தவிா்க்க இந்தியா முயற்சித்து வருகிறது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதி தகுதிச்சுற்று ஆட்டங்களுக்கு தயாராகும் வகையில் நட்பு ரீதியிலான ஆட்டங்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாதம் 23-ஆம் தேதி பஹ்ரைனுடனும், 26-ஆம் தேதி பெலாரஸுடனும் விளையாட அட்டவணையிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷிய அணிகள் மற்றும் போட்டியாளா்களுக்கு சா்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் தடை விதித்து வருகின்றன. அந்தப் போரில் ரஷியாவுக்கு பெலாரஸும் ஆதரவளித்து வருவதால் அந்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தடைகள் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 26-ஆம் தேதி பெலாரஸுடன் விளையாடவுள்ள ஆட்டத்தை இந்தியாவும் தவிா்க்க முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளன வட்டாரங்கள் கூறுகையில், ‘ரஷியாவைப் போன்று பெலாரஸுக்கு ஃபிஃபா தடை விதிக்கவில்லை. ஆனால் அவ்வாறு விதித்தால் விளையாட இயலாது. இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. தடை விதிக்கப்படும் பட்சத்தில் பெலாரஸுக்குப் பதிலாக வேறு அணியுடன் விளையாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தது.

ரஷியாவைப் போல, பெலாரஸுடனும் விளையாடுவதற்கு பல்வேறு போட்டிகளிலும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அணிகள் மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.