இந்திய அணி தவறவிட்ட இரு விஷயங்கள்: மேத்யூ ஹேடன்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது பற்றி பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹேடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தவறவிட்ட இரு விஷயங்கள்: மேத்யூ ஹேடன்
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது பற்றி பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹேடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 63, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஞாயிறன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்திய அணியின் தோல்வி பற்றி பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும் ஆஸி. முன்னாள் வீரருமான மேத்யூ ஹேடன் கூறியதாவது:

பாகிஸ்தான் அணியில் தரமான பேட்டர்களும் தரமான பந்துவீச்சாளர்களும் உள்ளார்கள். ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா மட்டுமல்ல நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். 20 ஓவர்களுக்குள் அவர்களால் சேதாரத்தை ஏற்படுத்த முடியும். அரையிறுதியில் இந்தியா தவறவிட்டது என்னவென்றால், சுழற்பந்து வீச்சில் லெக் ஸ்பின்னர் இல்லாதது தான். அதேபோல 6-வது பந்துவீச்சாளர் இல்லாததும். பாகிஸ்தான் அணியில் 6 பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். 7-வதாகப் பந்துவீசவும் வீரர் இருக்கிறார். அதனால் டி20 கிரிக்கெட்டுக்குத் தேவையான எல்லாமும் பாகிஸ்தான் அணியில் உள்ளன என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com