ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்ற இந்திய கிரிக்கெட் அணி!

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
படம் - twitter.com/BCCI
படம் - twitter.com/BCCI
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதுகுறித்த தகவலைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது பிசிசிஐ. 

உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அக்டோபர் 17 அன்று ஆஸ்திரேலியா, அக்டோபர் 19 அன்று நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக காபா மைதானத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கு முன்பு 10, 12 தேதிகளில் உள்ளூர் அணியுடனும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com