இந்தியா மே.இ.தீவுகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி மே.இ.தீவுகளுக்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்று 3-0 என இந்திய அணி வெற்றிப் பெற்றது. அடுத்து டி20 தொடரில் 5போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மீதமிருகும் போட்டி இன்று இரவு நடைபெறும்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிக் செய்து 20 ஓவர்களுக்கு 191 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பண்ட் 44, ரோஹித் 33, சாம்சன் 30 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய மே.இ. தீவுகள் அணி 19.1 ஓவர்களுக்கு 132 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆவேஷ் கான் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.