பிக் பாஷ் லீக் டி20 போட்டியை பெர்த் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
மெல்போர்னில் இன்று நடைபெற்ற பிபிஎல் இறுதிச்சுற்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆஷ்டன் டர்னர் 54 ரன்களும் லாரி இவான்ஸ் ஆட்டமிழக்காமல் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 76 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி அணி, 16.2 ஓவர்களில் 92 ரன்கள் மட்டும் எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டேனியல் ஹியூக்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிபிஎல் கோப்பையை வென்ற பெர்த் அணி, 4-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. பிபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற முதல் அணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்குப் புதிய சிக்கல்!
யு-19 உலகக் கோப்பை காலிறுதி: இலங்கையை வெளியேற்றி அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: வாரியத் தலைவர் குற்றச்சாட்டு
சென்னை வந்தார் தோனி: காரணம் வெளியிட்ட சிஎஸ்கே
ரஞ்சி கோப்பைப் போட்டி விவகாரம்: ரவிசாஸ்திரி கருத்து