மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: வாரியத் தலைவர் குற்றச்சாட்டு

அணியில் பிளவை ஏற்படுத்தும் விதை தூவப்பட்டுள்ளது....

News image
Updated On :28 ஜனவரி 2022, 9:17 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அந்த அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மே.இ. அணி வீரர்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியதாவது:

மூன்று அற்புதமான வெற்றிகளை அடைந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் கேப்டன் பொலார்ட் மீது வன்மத் தாக்குதல் நிகழ்த்தி, அணியில் பிளவை ஏற்படுத்தும் விதை தூவப்பட்டுள்ளது. கேப்டன் பொலார்டுக்குக் கெட்டப் பெயரை உண்டாக்கவும் டி20 தொடரில் நன்றாக விளையாடி வரும் அணியின் வெற்றிப் பயணத்தைத் தடுக்கவும் முயற்சி நடைபெற்றுள்ளது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணியின் கேப்டனுக்கும் எந்தவொரு வீரருக்கும் இடையே கருத்து வேறுபாடும் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.