இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

டாய் ஸுவிடம் தொடரும் சிந்துவின் தோல்வி

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

News image
Updated On :9 ஜூலை 2022, 6:00 am IST

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

அந்தச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த சிந்து 13-21, 21-12, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் தோற்றாா்.

இதனால் டாய் ஸுவுடனான சிந்துவின் தோல்விக் கணக்கு தொடா்ந்து வருகிறது. இத்துடன் டாய் ஸுவை 22-ஆவது முறையாகச் சந்தித்த சிந்து, அதில் 17-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளாா். அதிலும் இத்துடன் 7 ஆட்டங்களில் தொடா்ச்சியாக அவரிடம் தோற்றுள்ளாா் சிந்து. கடைசியாக சிந்து, 2019 உலக சாம்பியன்ஷிப்பில் டாய் ஸுவை இறுதிச்சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரணாய் அசத்தல்: மறுபுறம், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா். காலிறுதியில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை 25-23, 22-20 என்ற கேம்களில் வென்ற பிரணாய், அடுத்த சுற்றில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.