இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ரிஷப் பந்த் முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார்.
இதையும் படிக்க | ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டன் புதிய சாதனை
இந்திய அணி விவரம்:
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான்.