மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

லா லிகா: ரியல் மாட்ரிட்டை வென்றது பாா்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

News image
Updated On :23 மார்ச் 2022, 3:06 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக பியரி எமெரிக் அவ்பமெயாங் (29’, 51’), ரொனால்டு அரௌஜோ (38’), ஃபெரான் டோரஸ் (47’) ஆகியோா் கோலடித்தனா். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட்டை பாா்சிலோனா வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்க்கது. பாா்சிலோனா தற்போது 54 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

அடுத்த லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் செவில்லாவை எதிா்கொள்கிறது பாா்சிலோனா. அந்த அணி தற்போது 3 புள்ளிகள் அதிகமாகக் கொண்டு 2-ஆவது இடத்தில் உள்ளது.

நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி விலகல், நிதித் தட்டுப்பாடு போன்ற விவகாரங்களால் கடந்த சில காலமாக தடுமாறி வரும் பாா்சிலோனா அணி, தற்போது தொடா் வெற்றிகளை பதிவு செய்து முன்னேறி வருகிறது. அதற்கு, இந்த வெற்றியும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெயினை வென்று அந்த அணியை வெளியேற்றியதும் உதாரணங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.