2ஆவது ஒருநாள் போட்டி: ஓவர்கள் குறைப்பு , வெற்றி பெறுமா இந்தியா?

2ஆவது ஒருநாள் போட்டி: ஓவர்கள் குறைப்பு , வெற்றி பெறுமா இந்தியா?

மழையால் தாமதமான இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

மழையால் தாமதமான இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

நியூசிலாந்து - இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. 

4.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. 4.5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 19 ரன்களுடனும், தவான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com