பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

 மீண்டது ஆர்ஜென்டீனா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா தனது 2-ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. 

News image
Updated On :28 நவம்பர் 2022, 12:50 am

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா தனது 2-ஆவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. 

முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் தோற்று அதிர்ச்சியில் இருந்த ஆர்ஜென்டீனா, இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான பந்தயத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்த மெக்ஸிகோ, தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்தது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் ஆட்டத்தின் தோல்வியிலிருந்து மீள்வதற்கான முனைப்புடன் ஆடியது ஆர்ஜென்டீனா. ஆனால், அந்த முயற்சிகளுக்கான பலனை அவ்வளவு எளிதாக மெக்ஸிகோ விட்டுத் தருவதாகத் தெரியவில்லை. மாறாக, 9-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதை அந்த அணி வீணடித்தது. 

21-ஆவது நிமிஷத்தில் பந்தைத் தடுக்க முயன்றபோது ஆர்ஜென்டீன வீரர் அகுனாவை காலால் மிதித்ததற்காக மெக்ஸிகோ வீரர் அரெüஜோவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் 40-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணி வீணடித்தது. 43-ஆவது நிமிஷத்தில் மெக்ஸிகோ வீரர் குட்டெரெûஸ கீழே தள்ளியதற்காக ஆர்ஜென்டீனாவின் கொன்ஸôலோ மான்டியெலுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. 

அதில் மெக்ஸிகோவுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக விடாமல் அருமையாகத் தடுத்தார் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் இரு அணிகளுக்குமே கிடைத்த மேலும் சில ஃப்ரீ கிக் வாய்ப்புகள் கோலாக மாறாமல் போயின. 

இறுதியாக, ஆட்டத்தின் முதல் கோலை மெஸ்ஸி 64-ஆவது நிமிஷத்தில் அடித்தார். ஏஞ்சல் டி மரியாவிடமிருந்து பாஸ் பெற்ற மெஸ்ஸி, கோல் போஸ்ட்டிலிருந்து 25 மீட்டர் தொலைவில் நின்றபடியே போஸ்டின் வலதுபக்க கீழ்பகுதிக்குள்ளாக பந்தை உதைத்து கோல்கீப்பர் பந்தை எட்ட முடியாதவ வகையில் கோலடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக, 87-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு 2-ஆவது கோல் வாய்ப்பும் கிடைத்தது. 

இறுதிவரை இந்த முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட ஆர்ஜென்டீனா கடைசியில் வெற்றி பெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.