சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கேப்டனின் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!

மலேசியாவுக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) வெற்றி பெற்றது இந்திய அணி.

News image

ஷெஃபாலி வர்மா

Updated On :3 அக்டோபர் 2022, 4:37 pm IST

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் மலேசியாவுக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) வெற்றி பெற்றது இந்திய அணி.

முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது. இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணியிலிருந்து மந்தனா, பூஜா, ஸ்னேக் ராணா, ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக மேகனா, கிரண், மேக்னா சிங், ராஜேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். மலேசியா தனது முதல்  ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

ஷெஃபாலி வர்மாவும் மேகனாவும் இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். 13.5 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தார்கள். ஷெஃபாலி வர்மா 46, மேகனா 69 ரன்களுக்க்கு ஆட்டமிழந்தார்கள். ஷெஃபாலி வர்மா இன்று மூன்று சிக்ஸர்களை அடித்தார். இந்திய அணி   20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. 

மலேசியாவின் இன்னிங்ஸின்போது மழை வரும் அறிகுறி தெரிந்ததால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். 5 ஓவர்கள் முடிந்த பிறகு தான் வேகப்பந்து வீச்சாளர் மேக்னா சிங் பந்துவீசினார். எதிர்பார்த்தது போல 6-வது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. அப்போது மலேசிய அணி, 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் டி/எல் முறையில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறியதாவது: ஃபீல்டிங் செய்ய வந்தபோது சீக்கிரம் மழை வந்துவிடும் என எங்களுக்குத் தெரியும். எனவே 5 ஓவர்களை விரைவாக வீசுவதற்குத்தான் முன்னுரிமை அளித்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.