பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மீண்டும் முதலிடத்தில் ஹைதராபாத் எஃப்சி

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 5:08 am IST

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.

ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு ஹைரதாபாத் எஃப்சி- எஃப்சி கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தோற்காத அணிகள் என்ற பெருமையுடன் களத்தில் இறங்கின. சொந்த மைதானத்தில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது.

10-ஆவது நிமிஷத்தில் நைஜீரிய வீரா் பாா்த்தோலோமியு கடத்தி அனுப்பிய பந்தை பிசகாமல் கோலாக்கினாா் ஹைதராபாத் வீரா்

ஜேவியா் சிவெரியோ. முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருந்த கோவா அணியால் கோல் போட முடியவில்லை.

இரண்டாம் பாதியில் 83-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்காமல் கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தாா் அதன் வீரா் அல்வரோ வாஸ்கீஸ்.

கூடுதல் நிமிஷத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டாா் எடு பெடியா. இறுதியில் 1-0 என வெற்றி பெற்ற ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. எஃப்சி கோவா அணி 4-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.