இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மீண்டும் முதலிடத்தில் ஹைதராபாத் எஃப்சி

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 11:38 pm

DIN

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.

ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு ஹைரதாபாத் எஃப்சி- எஃப்சி கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தோற்காத அணிகள் என்ற பெருமையுடன் களத்தில் இறங்கின. சொந்த மைதானத்தில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது.

10-ஆவது நிமிஷத்தில் நைஜீரிய வீரா் பாா்த்தோலோமியு கடத்தி அனுப்பிய பந்தை பிசகாமல் கோலாக்கினாா் ஹைதராபாத் வீரா்

ஜேவியா் சிவெரியோ. முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருந்த கோவா அணியால் கோல் போட முடியவில்லை.

இரண்டாம் பாதியில் 83-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்காமல் கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தாா் அதன் வீரா் அல்வரோ வாஸ்கீஸ்.

கூடுதல் நிமிஷத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டாா் எடு பெடியா. இறுதியில் 1-0 என வெற்றி பெற்ற ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. எஃப்சி கோவா அணி 4-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.