அலட்சியத்தால் ஜடேஜாவுக்குக் காயமா?: பிசிசிஐ அதிருப்தி?

இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் காயத்தால் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அலட்சியத்தால் ஜடேஜாவுக்குக் காயமா?: பிசிசிஐ அதிருப்தி?

இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் காயத்தால் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசியக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் 3இல் ஒரேயொரு போட்டிகளில் மட்டுமே வென்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. 

இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜாவுக்கு காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் விளையாடவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். அவர் இல்லாததால் அவருக்கு பதிலாக யாரை தேர்ந்தெடுப்பதென்ற குழப்பம் ஏற்பட்டது. அவர் இடது கை பேட்டர் என்பதும் அதிரடியான வீரர் என்பதும் முக்கியமான காரணம். அதனால் இந்திய அணியின் சமநிலை குழைந்தது. இது குறித்து பிசிசிஐ கூறியதாக வந்த தகவல் பின்வருமாறு: 

அவரது காயம் எங்களுக்கு மகிழ்ச்சியானது கிடையாது. அவர் எந்த வீரதீர செயலை செய்யும் முன்பு டி20 உலக கோப்பை குறித்து யோசிக்க வேண்டும். ஆனால் அவர் அதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. ஜடேஜாவின் இந்த அணுகுமுறை எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com