தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

டி20யில் அதிக வெற்றிகள்: விராட் கோலியை முந்திய ரோஹித் சர்மா!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:55 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

ஆஸி. அணிக்கு எதிராக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் ரோஹித் சர்மா 42 போட்டிகளில் தலைமை தாங்கி 33 போட்டிகள் வென்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தலைமையில் 50 போட்டிகளில் 32 போட்டிகள் வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். எம்.எஸ்.தோனி 72 போட்டிகளில் தலைமை தாங்கி 42 போட்டிகள் வென்று முதலிடத்தில் இருக்கிறார். 

  1. எம்.எஸ். தோனி - 42 வெற்றிகள் 
  2. ரோஹித் சர்மா - 33 வெற்றிகள் 
  3. விராட் கோலி -  32 வெற்றிகள் 

மேலும், ரோஹித் சர்மா வெற்றி சதவிகிதத்திலும் இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் இரண்டாமிடமும் பிடித்துள்ளார். முதல் இடம் 80.39 சதவிகிதத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்கர் இருக்கிறார். ரோகித் 78.57 சதவிகித்த்துடன் இரண்டாமிடம். சர்ப்ராஸ் அஹமது மூன்றாவது இடம். விராட் கோலி இதில் 5வது இடம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.