சூரியன் மீண்டும் உதிக்கும்: ஆசியக் கோப்பையில் இடம்பெறாதது குறித்து சஹால்! 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஹாலின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
சூரியன் மீண்டும் உதிக்கும்: ஆசியக் கோப்பையில் இடம்பெறாதது குறித்து சஹால்! 

சஹால், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும் 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (187) எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

6 அணிகள் களம் காணும் ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டி, ஆகஸ்ட் 30-இல் தொடங்கி செப்டம்பா் 17-இல் நிறைவடைகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹார்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், அக்‌ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அணியில் அஸ்வின், சஹால் ஆகியோர் இடம் பெறவில்லை. அணியில் தேர்வாகாதது குறித்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் சூரியன் மேகமூட்டத்துடன் இருக்குமாறும் பின்னர் சூரியன் பிரகாசமாக இருக்குமாறும் பதிவிட்டுள்ளார். 

சூரியன் மீண்டும் உதிக்கும் என்பதைதான் சஹால் மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆசியக் கோப்பை இல்லையென்றால் அடுத்து ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதிலாவது சஹால் பங்கேற்பாரா என ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com