ஆஷஸ் தொடரைவிட மிகப்பெரியது இந்தியாவை வெல்வது: ஸ்டீவ் ஸ்மித் 

பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடர் குறித்து பிரபல ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
கோப்புப் படம் (ஸ்டீவ் ஸ்மித்)
கோப்புப் படம் (ஸ்டீவ் ஸ்மித்)
Published on
Updated on
1 min read

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது. 4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடா்களில், டெஸ்ட் எப்போதுமே முக்கியமான ஒன்று.  

இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கடுமையான போட்டி என்றால் அது ஆஷஸ் தொடர்தான். அதேபோல் ஆஸி.க்கு இந்தியாவின் பார்டர் கவாஸ்கர் கோப்பை முக்கியமானது. ஏனெனில் இந்தியா ஆஸி.வை இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பிப். 9ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டிக்கு சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 15,901 ரன்களை கடந்துள்ளார். 30 சதங்களும் 4 இரட்டை சதங்களும் அடித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் இது குறித்து கூறியதாவது: 

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது. ஸ்பின் அதிகமாக இருக்கும் இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்டில்  வீழ்த்துவது என்பது ஆஷஸ் தொடரை வெல்வதை விடப் பெரியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com