அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டிஎன்பிஎல் ஏலம்: அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களின் பட்டியல்!

டிஎன்பிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் சாய் சுதர்சன் அதிகத் தொகைக்குத் தேர்வாகியுள்ளார். 

News image
சாய் சுதர்சன் (கோப்புப் படம்)
Updated On :24 பிப்ரவரி 2023, 12:04 pm

DIN

டிஎன்பிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் சாய் சுதர்சன் அதிகத் தொகைக்குத் தேர்வாகியுள்ளார். 

டிஎன்பிஎல் 2022 கோப்பையை கோவை, சேப்பாக் ஆகிய இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. இந்நிலையில் முதல்முறையாக டிஎன்பிஎல் போட்டிக்கு வீரர்கள் ஏலம் நடைபெற்றுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஏலத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பாகப் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் பங்கேற்றார். அந்த அணி வீரராக சமீபத்தில் தக்கவைக்கப்பட்ட அஸ்வின், ஏலத்தில் பங்கேற்று வீரர்களின் தேர்வில் தன்னுடைய ஆலோசனையை வழங்கினார்.

ஏலத்தில் அதிகபட்சத் தொகையாகப் பிரபல பேட்டர் சாய் சுதர்சனை ரூ. 21.6 லட்சத்துக்குத் தேர்வு செய்தது லைகா கோவை கிங்ஸ். கடந்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் சுதர்சனைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. தற்போது அதைவிடவும் அதிகத் தொகைக்கு டிஎன்பிஎல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் சுதர்சன். 

டிஎன்பிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்

1. சாய் சுதர்சன் (லைகா கோவை கிங்ஸ்) - ரூ. 21.6 லட்சம்
2. சஞ்சய் யாதவ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) - ரூ. 17.6 லட்சம்
3. ஷிவம் சிங் (திண்டுக்கல் டிராகன்ஸ்) - ரூ. 15.95 லட்சம்
4. சோனு யாதவ் (நெல்லை ராயல் கிங்ஸ்) - ரூ. 15.2 லட்சம்
5. அபிஷேக் தன்வர் (சேலம் ஸ்பார்டன்ஸ்) - ரூ. 13.2 லட்சம்

இதர தமிழக வீரர்களான சாய் கிஷோரை ரூ. 13 லட்சத்துக்கும் விஜய் சங்கரை ரூ. 10.25 லட்சத்துக்கும் அஜித் ராமை ரூ. 4.2 லட்சத்துக்கும் திருப்பூர் தமிழன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. வாஷிங்டன் சுந்தரை ரூ. 6.75 லட்சத்துக்கு மதுரை அணி தேர்வு செய்துள்ளது. வருண் சக்ரவர்த்தியை ரூ. 6.75 லட்சத்துக்கு திண்டுக்கல் அணி தேர்வு செய்துள்ளது. நடராஜனை ரூ. 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி தேர்வு செய்துள்ளது. 

டிஎன்பிஎல் போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.