காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

கவாஜா 195*, ஸ்மித் 104 ரன்கள்: 2-வது நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.

News image

கவாஜா (கோப்புப் படம்)

Updated On :2 பிப்ரவரி 2024, 12:08 am IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கவாஜா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மழை, வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

2-வது நாளில் ஆஸி. பேட்டர்களான கவாஜாவும் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடினார்கள். ஸ்மித் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 30-வது டெஸ்ட் சதம். 206 பந்துகளில் சதமடித்த கவாஜா, தொடர்ந்து நன்கு விளையாடினார். ஸ்மித்துக்குப் பிறகு டிராவிஸ் ஹெட், கவாஜாவுக்கு நல்ல இணையாக விளங்கினார். கவாஜா - ஸ்மித் கூட்டணி 209 ரன்களும் கவாஜா - ஹெட் கூட்டணி 112 ரன்களும் எடுத்தன. ஹெட் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195, ரென்ஷா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.