பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கவாஜா 195*, ஸ்மித் 104 ரன்கள்: 2-வது நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.

கவாஜா (கோப்புப் படம்)

Published On :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கவாஜா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மழை, வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

2-வது நாளில் ஆஸி. பேட்டர்களான கவாஜாவும் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடினார்கள். ஸ்மித் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 30-வது டெஸ்ட் சதம். 206 பந்துகளில் சதமடித்த கவாஜா, தொடர்ந்து நன்கு விளையாடினார். ஸ்மித்துக்குப் பிறகு டிராவிஸ் ஹெட், கவாஜாவுக்கு நல்ல இணையாக விளங்கினார். கவாஜா - ஸ்மித் கூட்டணி 209 ரன்களும் கவாஜா - ஹெட் கூட்டணி 112 ரன்களும் எடுத்தன. ஹெட் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195, ரென்ஷா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.