ஹர்திக் பாண்டியா என்னை விட சிறப்பாக விளையாடுகிறார்: வெங்கடேஷ் ஐயர்

ஹர்திக் பாண்டியா தன்னைவிட சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் இடம்பிடிக்க கடினமாக உழைக்க வேண்டுமென வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா என்னை விட சிறப்பாக விளையாடுகிறார்: வெங்கடேஷ் ஐயர்

இந்திய ஒருநாள் அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜடேஜாவுக்கு அடுத்து ஹார்திக் பாண்டியாதான் எல்லோரது தேர்வும்.

2018இல் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. பின்னர் 2022இல் காயம் குணமாகி விளையாட வந்தார். ஐபிஎல் போட்டியில் புதிய அணியான குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றார். 2023 ஐபில் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று சிஎஸ்கே அணியிடம் தோற்றார்.

இதற்கிடையில் வெங்கடேஷ் ஐயர் சிறந்த ஆல்ரவுண்டராக ஐபிஎல் போட்டிகளில் மிளிர ஆரம்பித்தார். தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா ஒருநாள் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

ஹர்திக் பாண்டியா நல்ல திறமைசாலி. நான் இந்திய அணியில் இடம் பிடிக்க அவரைப் போல் சிறப்பாக விளையாட வேண்டும். இப்போது அவருக்கு அருகில் நான் இல்லை என்பதுதான் நேர்மையான உண்மை. ஆனால் நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com