ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. மும்பை 20 ஓவர் முடிவில் 139/8 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் வேகப் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் 2023இன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பர்பிள் கேப் துஷார் தேஷ்பாண்டேவிடம் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:
துஷார் தேஷ்பாண்டே (சிஎஸ்கே) - 19
முஹமது ஷமி (குஜராத் ) - 18
ரஷித் கான் (குஜராத்) - 18
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



