ஐபிஎல்-இன் 53வது போட்டியாக புள்ளிப் பட்டியலில் 7,8வது முறையே இருக்கும் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை செய்கிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் நிலைத்து ஆடி 57 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 8 பந்துகளில் 21 ரன்களும், ஹர்ப்ரீட் பார் 9 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான ஸ்கோரை சேர்த்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 179/7 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி சார்பாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஷர்சித் ராணா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்.
இந்தப் போட்டியில் பஞ்சாப் வென்றால் 3வது இடத்துக்கு முன்னேறும். கேகேஆர் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு போக வாய்ப்புள்ளது.