பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அமைதியில் இந்திய ரசிகர்கள்: சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சொன்னதை செய்து காட்டி வருகிறார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:52 am IST

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.  

டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. தற்போது இந்திய அணி  32 ஓவரில் 162 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கான ஆதரவாளர்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். மைதானத்தில் இருக்கும் 1,30,000 பார்வையாளர்களும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். நாளைய இறுதிப்போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு” எனக் கூறியிருந்தார். 

Story image

ரோகித் ஆட்டமிழந்த பிறகு பவுண்டரிகள் குறைந்து  விட்டது. பின்னர் இந்திய பேட்டர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழக்க மைதானமே அமைதியில் மூழ்கியது. 

Story image

விராட் கோலி விக்கெட்டினை கம்மின்ஸ் வீழ்த்திய போது  மைதானமே மயான அமைதியில் மூழ்கியது. இதை பார்க்கும்போது கம்மின்ஸ் சொன்னதை செய்து காட்டிவிட்டதாகவே தெரிகிறது. 

கம்மின்ஸ் 7 ஓவர் வீசி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.