எம்.எஸ். தோனி தலைமையில் செயல்பட்டு வரும் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி ஐபிஎல் போட்டிகளில் மிகவும் முக்கியமான அணி. அதிகம் முறை (12) ப்ளே- ஆஃப்க்கு தேர்வான அணியாக சிஎஸ்கே இருக்கிறது. மேலும் நடப்பு சாம்பினான சிஎஸ்கே, மும்பை இந்தியனஸ் அணி இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றோடு ஐபிஎல் அணிகள் தங்களுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் யார் யாரை அணியில் இருந்து விடுவித்துள்ளது குறித்தும் பட்டியலை தர வேண்டும்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 8 வீரர்களை விடுவித்துள்ளது. அம்பத்தி ராயுடு (ரூ.6.7 கோடி), கைல் ஜேமிசன் (ரூ.1 கோடி), சிசாண்டா மலாகா (ரூ.50 இலட்சம்), ஆகாஷ் சிங் (ரூ.20 இலட்சம்), பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.2 கோடி), டுவைன் பிரிடோரியஸ் (ரூ.50 இலட்சம்), பகவத் வர்மா (ரூ.20 இலட்சம்), சுப்ரன்சு சேனாபதி (ரூ.20 இலட்சம்).
இதன்மூலம் ரூ.32.1 கோடி ரூபாய் சிஎஸ்கேவிடம் மீதமிருக்கிறது. 6 இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் 3 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
CSK will be having 32.1cr left in their purse at the auction.#IPLretention #IPLRetentions #IPL #iplupdates pic.twitter.com/WXfBydYcUI
â Abhishek sharma (@abhisharma108rs) November 26, 2023
அடுத்தாண்டுக்கான மினி ஏலம் வரும் டிச.19ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. இதன் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










