அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இந்திய கால்பந்து அணியை ஜோதிடர் தேர்வு செய்தாரா?

முக்கிய போட்டிகளில் விளையாடும் இந்திய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் தேர்வு செய்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2023, 6:49 am

DIN

முக்கிய போட்டிகளில் விளையாடும் இந்திய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் தேர்வு செய்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தில்லி புறநகரை சேர்ந்த ஜோதிடர் பூபேஷ் சர்மா என்பவரை இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், பயிற்சியாளர் ஸ்டிமேக்கிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவேண்டிய வீரர்கள், அந்த ஜோதிடரின் அறிவுரைபடியே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆங்கிய செய்தி ஊடகத்திடம் பேசிய இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் குஷல் தாஸ், 2022 மே மாதம் ஜோதிடருக்கும், பயிற்சியாளருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ‘பிளேயிங் 11’ பட்டியலை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து, இவர் இன்று நன்றாக விளையாடுவார், இவர் மீது எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம், இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கியுள்ளார். போட்டித் தொடங்கும்போது, இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், மிகவும் சிறந்த வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஏனென்றால், அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் குறிப்பிட்டிருந்ததுதான் காரணம்.

இது மட்டுமல்ல், பிளேயிங் 11 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரையும் ஜோதிடரே பரிந்துரைத்துள்ளார்.

இதேபோல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற ஜோர்டான், கம்போடியா, ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் கால்பந்து அணியையும் ஜோதிடர் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு இடையே நடந்த நூற்றுக்கணக்கான உரையாடல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு போட்டித் தொடங்கும் முன்பும், ஸ்டெமக், ஜோதிடரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்த தகவல், இந்திய அணியின் தேர்வு முறையில் இருக்கும் வெளிப்படைத்தன்மையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

கடைசியாகக் கிடைத்திருக்கும் தகவல்தான் அதிர்ச்சிக்கு அதிர்ச்சிகொடுத்திருக்கிறது. அதாவது, கால்பந்து அணியில் விளையாடும் வீரர்களைப் போலவே, அவர்களைத் தேர்வு செய்ததற்கு, ரூ. 12 முதல் 15 லட்சம் வரை ஜோதிடருக்கு கட்டணமும் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.