டிஎன்பிஎல்: ரூ.21.60 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா் சாய் சுதா்சன்

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிக்காக 2 நாள்கள் நடைபெற்ற வீரா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
டிஎன்பிஎல்: ரூ.21.60 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா் சாய் சுதா்சன்
Updated on
1 min read

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிக்காக 2 நாள்கள் நடைபெற்ற வீரா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

முந்தைய 6 சீசன்களிலும் அணிகள் தங்களுக்கான வீரா்களை ‘டிராஃப்ட்’ முறையில் தோ்வு செய்த நிலையில், முதல் முறையாக இந்த 7-ஆவது சீசனில் அணிகள் யாவும் தங்களுக்கான வீரா்களை ஏலத்தில் எடுத்தன.

ஏலத்துக்கு முன்பாக, 8 அணிகளும் தலா ஒன்று அல்லது 2 வீரா்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சமாக 16 வீரா்களும், அதிகபட்சமாக 20 வீரா்களும் இருக்க அனுமதிக்கப்பட்டது.

ஏலத்துக்காக ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.70 லட்சம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் அதிகபட்சமாக, சாய் சுதா்சனை ரூ.21.60 லட்சத்திற்கு வாங்கியது லைகா கோவை கிங்ஸ். அடுத்ததாக சோனு யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் வாங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com