அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இந்திய அணியின் ஆதிக்கத்தை நிறுத்துமா இலங்கை?

11 டி20 தொடர்களில் தோல்வியடையாமல் உள்ளது இந்திய அணி. 

News image
Updated On :7 ஜனவரி 2023, 3:24 pm IST

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. 3-வது டி20 ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.

2019-ல் ஆஸ்திரேலியா 2-0 என டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு 11 டி20 தொடர்களில் தோல்வியடையாமல் உள்ளது இந்திய அணி. 

மேலும் இந்தியாவில் இலங்கை அணி இதுவரை ஒரு டி20 தொடரையும் வென்றதில்லை. 4 தொடரில் தோற்று ஒரு தொடரை டிரா செய்துள்ளது. 

இதனால் இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துமா இலங்கை என்கிற கேள்வி எழுந்துள்ளது. இரு டி20 ஆட்டங்களிலும் இந்திய அணியின் மேல்வரிசை பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. முதல் டி20யில் தீபக் ஹூடாவும் அக்‌ஷர் படேலும் 2-வது டி20யில் சூர்யகுமார் யாதவும் அக்‌ஷர் படேலும் இந்தியாவைக் காப்பாற்றப் பெரிதும் போராடினார்கள். 

56* (22), 45 (27), 33* (18), 74* (38) and 47* (19) என  இந்தியாவுக்கு எதிரான கடைசி 5 டி20 ஆட்டங்களிலும் அபாரமாக விளையாடியுள்ளார் இலங்கை கேப்டன் ஷனகா. இந்தியாவுக்கு எதிராக நன்குப் பந்துவீசவும் செய்கிறார். இதனால் இவருடைய பங்களிப்பில் தான் இலங்கை  அணியின் வெற்றி உள்ளது.

இந்திய அணியில் பெரிதும் மாற்றம் இருக்காது என நம்பலாம். ராஜ்கோட் மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமானது என்பதால் இன்றைய ஆட்டத்திலும் நிறைய ரன்களை எதிர்பார்க்கலாம். இந்தியாவின் கேப்டனாக 7 ஆட்டங்களுக்குத் தலைமை வகித்த பாண்டியா, முதல் தோல்வியை மும்பையில் எதிர்கொண்டார். இன்னொரு தோல்வி, இலங்கையின் சாதனையாகப் பார்க்கப்படும். அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.