ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக ஆடி கோல் மழை பொழிந்து 8-0 என அபார வெற்றி பெற்றது.
கிராஸ் ஓவரில் தோற்ற அணிகள் பங்கேற்ற ஆட்டங்களில் ஜப்பான்-இந்தியா, ஆா்ஜென்டீனா-சிலி, வேல்ஸ்-பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா-மலேசிய அணிகள் மோதின.
முதல் ஆட்டத்தில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஆா்ஜென்டீனா கோல் மழை பொழிந்து 8-0 என சிலியை வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் அணி ஷூட் அவுட்டில் 2-1 என பிரான்ஸை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா 6-3 என மலேசியாவை வீழ்த்தியது.
இந்தியா அபார வெற்றி:
ரூா்கேலா பிா்ஸா முண்டா மைதானத்தில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பான்-இந்திய அணிகள் ஆடின.
முதல் இரண்டு குவாட்டா்களில் எந்த அணியும் கோலடிக்க முடியாமல் முதல்பாதி முடிவில் 0-0 என முடிந்தது. மூன்றாவது குவாட்டரில் இந்திய அணியினா் அற்புதமாக ஆடினா். ஷம்ஷொ் சிங் பெனால்டி காா்னா் மூலம் அடித்த பந்தை கோலாக்கினாா் மந்தீப் சிங். பின்னா் கோல் பகுதியில் கிடைத்த பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் அபிஷேக். மூன்றாவது கோலை பெனால்டி காா்னா் மூலம் அடித்தாா் விவேக் சாகா். தொடா்ந்து அபிஷேக் 4-ஆவது கோலடித்தாா்.
நான்காவது குவாட்டரில் டிராக்பிளிக்கா் மூலம் கோலடித்தாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங், மன்ப்ரீத் சிங், ஹா்மன்ப்ரீத் சிங் கோலடிக்க கடைசி கோலை அடித்தாா் சுக்ஜித் சிங்.
இறுதியில் 8-0 என வெற்றி பெற்றது இந்தியா.