பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தோனி சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

கோப்புப் படம் (தோனி, ஸ்டோக்ஸ்)

Published On :

32 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொறுப்பேற்றார். 95 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 6021 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும். 

ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்று 17 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஷஸ் 3வது போட்டியில் ஆஸி. அணியை வீழ்த்தி தொடரில் 1-2 என மீண்டெழுந்துள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதில் தோனி தலைமையிலான அணி 4 முறை இதை வெற்றிகரமாக செய்துள்ளது. 

ஆஷஸ் போட்டியின் 3வது டெஸ்டினை வென்றதன் மூலம் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி 5 முறை 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நட்சத்திர கேப்டன் தோனியின் சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார். 

4வது ஆஷஸ் போட்டி ஜூலை 19ஆம் நாள் தொடங்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.