ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கையை பல்வேறு சாதனைகளுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி கண்டது தென்னாப்பிரிக்கா.
நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் தென்னாப்பிரிக்க அணி 428/5 ரன்களைக் குவித்தது. 44.5 ஓவா்களில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. குசால் மெண்டிஸ் 76, சரித் அஸலங்கா 79, ஷனகா 68 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களைச் சோ்த்தனா்.
இதையும் படிக்க: மழையால் ஆட்டம் ரத்து: இந்திய அணிக்கு தங்கம்!
இதில் அற்புதமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். இலங்கை அணியில் ஒருநாள் உலகக் கோப்பையில் ஒருப் போட்டியில் மட்டும் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் குசால் மெண்டிஸ்.
இதற்கு முன்பாக 2007-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா 7 சிக்ஸ்ர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.