பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வார்னர், ஹெட் அசத்தல்: நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388/10 ரன்கள் எடுத்துள்ளது. 

News image
Updated On :28 அக்டோபர் 2023, 2:29 pm IST

கடந்த அக்.5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

ஆஸி.யின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்தின் பௌலர்களை அடித்து நொறுக்கினார்கள். 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் வார்னர்-ஹெட். வார்னர் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் காயத்துக்குப் பிறகு ஆடும் முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி சதமடித்து 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Story image

அடுத்து வந்த பேட்டர்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் இறுதியில் மேக்ஸ்வெல்-பாட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடினார்கள். 49.2 ஓவர் முடிவில் ஆஸி. 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

மிட்செல் மார்ஷ்- 36, மேக்ஸ்வெல்- 41, பாட் கம்மின்ஸ் - 37, இங்கிலிஷ்- 37, ஸ்மித்- 18, லபுஷேன் - 18, ஸ்டார்க்- 1, ஜாம்பா - டக் அவுட். 

நியூசிலாந்து அணி சார்பாக க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக பந்து வீசினார். பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். சான்ட்னர் 2 விக்கெட்டுகளும் மேட் ஹென்றி, ஜிம்மி நீஷம் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

Story image

அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு 400+க்கு அதிகமான ரன்கள் வரவேண்டிய போட்டியில் நியூசி. சிறப்பாக கம் பேக் கொடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.