டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: முழு உடல்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருகிறேன். பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்காக ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரை தியாகம் செய்கிறேன். இந்தத் தியாகம் நான் மீண்டும் முழு உடல்தகுதியுடன் சிறப்பான ஆல்ரவுண்டராக எதிர்காலத்தில் விளையாட உதவும் என்றார்.
முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




