டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: முழு உடல்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருகிறேன். பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்காக ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரை தியாகம் செய்கிறேன். இந்தத் தியாகம் நான் மீண்டும் முழு உடல்தகுதியுடன் சிறப்பான ஆல்ரவுண்டராக எதிர்காலத்தில் விளையாட உதவும் என்றார்.
முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியது குறிப்பிடத்தக்கது.