விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஏமாற்றமாக இருக்கிறது, பேட்டிங் குறித்து ஆலோசனை இருக்கும்: ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிராக தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :5 ஆகஸ்ட் 2024, 4:32 pm IST

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 4) கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. இலங்கை அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டியில் தோல்வியடையும்போது எல்லா விஷயங்களும் நமக்கு ஏமாற்றமளிக்கும். இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததை மட்டும் காரணமாக கூற முடியாது. தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது.

சிறிது ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். நாங்கள் நன்றாக விளையாடவில்லை. நாங்கள் எப்படி விளையாடினோம் என்பது குறித்து அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஆனால், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது தொடர்பாக அணியில் ஆலோசனை இருக்கும். ஜெஃப்ரி வாண்டர்சே நன்றாக பந்துவீசினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.