கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தலாமா? ராணுவத்திடம் உறுதி கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவத்திடம் கேட்டுள்ளது.

News image

படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :10 ஆகஸ்ட் 2024, 12:41 pm

DIN

டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவத்திடம் கேட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறவுள்ளன. வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், டி20 உலகக் கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவத்திடம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் வங்கதேசத்தின் ராணுவ தளபதிக்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்துவது தொடர்பாக ராணுவத் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், தொடரை நடத்துவதற்கான பாதுகாப்பு உறுதி குறித்து ராணுவத்திடம் முறையிட்டுள்ளோம். வங்கதேசத்தில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்த முயற்சி செய்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் வன்முறை நீடிக்கும்பட்சத்தில், மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.