அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செய்திகள் சில வரிகளில்...

எஸ்டோனிய பேட்டர் சஹில் செளஹான் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து சாதனை

News image
Updated On :18 ஜூன் 2024, 10:48 pm

Vishwanathan

சைப்பரஸýக்கு எதிரான டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் எஸ்டோனிய பேட்டர் சஹில் செளஹான் 27 பந்துகளில் சதமடித்து (5 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்), டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்தவராக சாதனை படைத்தார். மொத்தமாக 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள் விளாசி 144 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (18) அடித்தவராகவும் சாதனை படைத்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையேயான 2}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடைபெறுகிறது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பேட்டர்கள் வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 3}ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கோல்ஃப் வீரர்களான சுபாங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லார் ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றனர். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். சர்வதேச கோல்ஃப் சம்மேளனம் வெளியிட்ட ரேங்கிங் பட்டியல் அடிப்படையில் அவர்கள் தகுதிபெற்றுள்ளனர். இதிலேயே மகளிர் பிரிவு தரவரிசை வரும் 24}ஆம் தேதி வெளியாகும்போது, இந்தியாவின் அதிதி அசோக், தீக்ஷா தாகர் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கால்பந்து அணிக்கான பயிற்சியாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், நீண்டகால கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதால் அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதெ மிகப்பெரிய சவால் என்றும் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன் தெரிவித்தார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக முன்னாள் வீரர்கள் கெளதம் கம்பீர், டபிள்யூ.வி. ராமன் ஆகியோரிடம், பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடத்தியுள்ளது. இதில் கம்பீர் அந்தப் பொறுப்புக்கு தேர்வாக இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.